மண்ணானாலும் திருசெந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும்புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப்பூவானாலும் சரவணபொய்கை பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருக்குறள் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச் சுவையானாலும் பஞ்சமிர்த சுவையாவேன்
அருள் முத்தானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும்புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப்பூவானாலும் சரவணபொய்கை பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருக்குறள் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச் சுவையானாலும் பஞ்சமிர்த சுவையாவேன்
அருள் முத்தானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்