Showing posts with label மண்ணானாலும் திருசெந்தூரில். Show all posts
Showing posts with label மண்ணானாலும் திருசெந்தூரில். Show all posts

Friday, July 24, 2015

mannaanalum thirchenduril

மண்ணானாலும் திருசெந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும்புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்  
பனிப்பூவானாலும் சரவணபொய்கை பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருக்குறள் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் 
பழச் சுவையானாலும் பஞ்சமிர்த சுவையாவேன் 
அருள் முத்தானாலும் வீடும் பேரும் உண்டாவேன் 
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்