Showing posts with label kannan paadalgal. Show all posts
Showing posts with label kannan paadalgal. Show all posts

Friday, July 24, 2015

aayarpadi maaligaiyil

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் 
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ 
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ 

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு 
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ 
அந்த மந்திரத்தில் அவருரங்க மயக்கத்திலே இவன் உறங்க 
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ 

நாகர் பதம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடிய பின் 
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ 
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் 
யார் அவனை தூங்க விட்டார் ஆராரோ 

கண்ணன் அவன் தூங்கி விட்டால் காசினியே தூங்கிவிடும் 
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ 
அவன் பொன்னழகை பார்ப்பதற்கும் தோகை முத்தம் கேட்பதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ