ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவருரங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
நாகர் பதம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடிய பின்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்
யார் அவனை தூங்க விட்டார் ஆராரோ
கண்ணன் அவன் தூங்கி விட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை பார்ப்பதற்கும் தோகை முத்தம் கேட்பதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவருரங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
நாகர் பதம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடிய பின்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்
யார் அவனை தூங்க விட்டார் ஆராரோ
கண்ணன் அவன் தூங்கி விட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை பார்ப்பதற்கும் தோகை முத்தம் கேட்பதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ