Showing posts with label maanikka veenai aendhum. Show all posts
Showing posts with label maanikka veenai aendhum. Show all posts

Thursday, July 23, 2015

Maanika veenai aenthum

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி 
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் 
அம்மா பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ 
ஜெயம் தரும் வேணி அம்மா 

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் 
பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்  -- (மாணிக்க...)


வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள் 
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் 
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் 
அள்ளி அறிவை தரும் அன்னையும் நீ 
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி 
காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி 
நான்முகன் நாயகி மோகன ரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ 
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி 
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ 
ஜெயம் தரும் வேணி அம்மா